Thursday, 29 April 2021

சங்க இலக்கிய நூல்கள்


பதினெண்மேற்கணக்கு

எட்டுத்தொகை நூல்கள்

நூல்        இயற்றியவர்     
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை192 பெயர்கள் கிடைக்கப்பெற்றன


குறுந்தொகை
205 புலவர்கள்

ஐங்குறுநூறு
கபிலர்

பதிற்றுப்பத்து
பலர்

பரிபாடல்
13 புலவர்கள்

கலித்தொகை
நல்லாண்டுவனார்

அகநானூறு
பலர்


புறநானூறு
பலர்


பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு நூல்கள்பாடிய புலவர்பாட்டுடைத் தலைவன்
திருமுருகாற்றுப்படைநக்கீரர்முருகன்
பொருநராற்றுப்படைமுடத்தாமக்கண்ணியார்கரிகால் வளவன்
சிறுபாணாற்றுப்படைநற்றாத்தனார்நல்லியக்கோடன்
பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங்கண்ணனார்தொண்டைமான் இளந்திரையன்
நெடுநல்வாடைநக்கீரர்நெடுஞ்செழியன்
குறிஞ்சிப் பாட்டுகபிலர்பிரகத்தனுக்கு தமிழர் கற்புநெறி பற்றி தெளிவிக்கப் பாடியது
முல்லைப்பாட்டுநப்பூதனார்நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது
மதுரைக் காஞ்சிமாங்குடி மருதனார்நெடுஞ்செழியன்
பட்டினப் பாலைகடியலுர் உருத்திரங் கண்ணனார்கரிகால் வளவன்
மலைபடுகடாம்பெருங்குன்றப் பெருங்காசிகனார்நவிரமலை நன்னன்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை

 

வரிசைஎண்

நூல்பெயர்

பாடல் எண்ணிக்கை

ஆசிரியர்

1.

நாலடியார்

400

சமண முனிவர்கள்

2.

நான்மணிக்கடிகை

101

விளம்பி நாகனார்

3.

இன்னா நாற்பது

40+1

கபிலர்

4.

இனியவை நாற்பது

40+1

பூதஞ்சேந்தனார்

5.

திருக்குறள்

1330

திருவள்ளுவர்

6.

திரிகடுகம்

100

நல்லாதனார்

7.

ஏலாதி

80

கணிமேதாவியார்

8.

பழமொழி நானூறு

400

முன்றுரை அரையனார்

9.

ஆசாரக்கோவை

100+1

பெருவாயின் முள்ளியார்

10.

சிறுபஞ்சமூலம்

104

காரியாசான்

11

முதுமொழிக்காஞ்சி

10*10

கூடலூர்க்கிழார்

12.

ஐந்திணை ஐம்பது

50

பொறையனார்

13.

ஐந்திணை எழுபது

70

மூவாதியார்

14.

திணைமொழி ஐம்பது

50

கண்ணன் சேந்தனார்

15.

திணைமாலை நூற்றைம்பது

150

கணிமேதையார்

16.

கைந்நிலை

60

 புல்லங்காடனார்

17.

கார்நாற்பது

40

கண்ணங் கூத்தனார்

18.

களவழி நாற்பது

40+1

பொய்கையார்

 ஐம்பெருங் காப்பியங்கள் 


திருக்குறள் - ஒரு அறிமுகம்,

 தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.


இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.

1.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.
பதினென்கீழ்க்கணக்கு
3.
ஐம்பெருங்காப்பியங்கள்
4.
ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை.

அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.

"
அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.


7th Maths

  Chapter 1 Number System Intext Questions 1. Write the following integers in ascending order: -5,0,2,4, -6,10, -10 2. If the integers -15, ...